×

பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும்: ராகுல் ஆவேசம்

புதுடெல்லி: பாஜ, ஆர்எஸ்எஸ் இரண்டும் அதிகாரத்துக்காக நாட்டையை எரித்து விடும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “பாஜ, ஆர்எஸ்எஸ் இரண்டும் ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே ஆர்வமாக உள்ளன. அதிகாரத்துக்காக மணிப்பூரை எரிப்பார்கள். நாட்டையே எரிப்பார்கள். அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் எந்த மாநிலமாக இருந்தாலும் அதிகாரத்துக்காக முழு நாட்டையும் விற்று விடுவார்கள். நாட்டின் மீது அன்பு கொண்டு, நாடு புண்படும்போது, நாட்டு மக்கள் துயரப்படும் போது அவர்களும் வருந்துவார்கள். ஆனால் அவர்கள் மனதில் உண்மையில் அப்படியொரு அன்பு, வலி, கவலை இல்லை. மக்களின் வலிகளை உணராமல் பிளவுப்படுத்தும் நோக்கத்தில் இரண்டும் செயல்படுகின்றன” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

The post பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும்: ராகுல் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BJP ,RSS ,Rahul ,New Delhi ,Congress ,president ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...